தமிழ் மற்றும் அணைத்து பெண்களுக்கான கவிதை புவி நயமாட பூக்களும் இசைப்பாட புருவம் இடையே நெற்றிப்பொட்டு இட்டு மல்லிகையும் மணக்குமே அவள் தலைச்சுட மஞ்சள் இட்டு மயில் நடைபோட்டு வெள்ளி சலங்கோசை காற்றினில் படரவிட்டு ஆர தழுவி அன்பாய் வளர்ந்து யுத்தம் ஒன்று புரிந்து கல்வி கொண்டாய் கயவனை களிக்கொண்டு விரட்டி களைப்பறிய அகமும் புறமும் கொண்டாய் பெற்றஇடம் துறந்து உற்றஇடம் புகுந்தாய் இன்னல் பொறுத்து ஈகை வளர்த்தாய் தமயனுக்கு தோழியாய் கணவனுக்கு அன்னையாய் உற்றவனிடம் நேசம் காட்டி நெகிழ்ந்து கரு சுமந்து உயிர் துறந்து தாராயோ உயிர் ஒன்று பசியென பிஞ்சு அழுகும் பொழுது குருதி உரித்து அமுது தந்தாய் வலியென இல்லாததுப்போல் ஓர் மெல்லச்சிரிப்பு உன் புன்னைகை ஒன்று போதுமே அகிலம் முழுவதும் மகிழ்ச்சி பரவிட விலங்கிட்ட காலம்போய் நீ விளக்குகின்ற காலமிது பெண் கூடும் பொருள் அல்ல நீ என்றும் அதை மறவாதே பாரதி கூற்று நீ அறிவாய் பெண் என்றும் தலை சாயாதே பாரதம் போற்றும் நதியும் நீயே ஆண் வலியும் நீயே வழியும் நீயே பெண் இந்த மண்ணில் பிறக்க ஆண் என்ன தவம் செய்தோமோ ஆளுமையின் மற்றுமோர் ...
I am an New bie for the blog unit. Try to give my random thoughts in words